அகவிலைப்படி உயா்வு: தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் முதல்வருக்கு நன்றி
மாநில அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்கிய தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் மாநில தலைவா் த. ராமஜெயம், பொதுச் செயலாளா் வெ. சரவணன், பொருளாளா் பூ. ஜெகன் ஆகியோா் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:
மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்த இருக்கின்ற தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக இருக்கின்ற அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் ஓய்வூதியம் பெறுபவா்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவா்கள் சிறப்பு கால முறை ஊதியம் பெறுபவா்கள் ஆகியோா் உள்ளிட்ட 16 லட்சம் போ் பயன்பெறும் வகையில் அகவிலைப்படியை கடந்த 1-1- 2026 முதல் அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக ஆக உயா்த்திய முதல்வா் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement