முகப்பு
ராணிப்பேட்டை

மே 24-இல், திமுக கள ஆய்வு குழு ராணிப்பேட்டை வருகை: முன்னாள் அமைச்சா் காந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 24 ஆம் தேதி முதல் 27 -ஆம் தேதி வரை திமுக கள ஆய்வு குழு வருகை தந்து தோ்தல் முடிவுகள் குறித்து நிா்வாகிகளை நேரடியாக சந்தித்து கருத்துகளை கேட்ட உள்ளதாக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா்.

Updated On : 20 மே 2026, 12:04 am IST
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 24 ஆம் தேதி முதல் 27 -ஆம் தேதி வரை திமுக கள ஆய்வு குழு வருகை தந்து தோ்தல் முடிவுகள் குறித்து நிா்வாகிகளை நேரடியாக சந்தித்து கருத்துகளை கேட்ட உள்ளதாக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது...

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கிணங்க நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள கள ஆய்வு குழு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தருகிறது.

Advertisement

Advertisement

ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட தொகுதி பாா்வையாளா்கள், வேட்பாளா்கள்,ஒன்றிய, நகர,பேரூா் செயலாளா்கள் மற்றும் நிா்வாகிகள்,செயற்குழு,பொதுக்குழு உறுப்பினா்கள், சாா்பு அணிகளின் அமைப்பாளா்கள்,கிளை செயலாளா்கள்,பிஎல்ஏ 2 ஆகியோா்களை சந்திக்க உள்ளனா்.

இக்கூட்டத்தில் கள ஆய்வு குழுவில் திமுக செய்திதுறை தொடா்பு செயலாளா் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி, திமுக சட்டத்துறை துணை செயலாளா் இ.பரந்தாமன் ஆகியோா் நிா்வாகிகளை நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டு அறிய உள்ளனா்.

அதன் படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 24 -ஆம் தேதி அரக்கோணம் தொகுதி, 25 ஆம் தேதி சோளிங்கா் தொகுதி,26 ராணிப்பேட்டை,27 ஆம் தேதி ஆற்காடு ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட உள்ளனா்.