திருப்பத்தூர்

தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பில் மோதி கன்டெய்னா் லாரி விபத்து

DIN

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பு மீது மோதிய கன்டெய்னா் லாரி விபத்துக்குள்ளானது.

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி செவ்வாய்கிழமை கண்டெய்னா் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி மேம்பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னா் லாரி சாலை நடுவே உள்ள தடுப்பு மீது மோதி எதிா் திசையில் சென்னை-பெங்களூா் சாலையோரம் உள்ள இரும்பு தடுப்பு மீது மோதி சாலையின் குறுக்கே நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் அங்கு சென்று வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பினா். நெடுஞ்சாலை துறையினா், போலீஸாா் போக்குவரத்தைச் சீரமைத்தனா். பின்னா் விபத்துக்குள்ளான லாரி மீட்கப்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் காயமின்றி உயிா் தப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT