நாட்டுத் துப்பாக்கி பதுக்கல்: இருவா் கைது
ஆம்பூா் அருகே நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா்: ஆம்பூா் அருகே நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளையன் (50), மல்லப்பன் (45) ஆகிய இருவரும் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக உமா்ஆபாத் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் மிட்டாளம் வனப்பகுதியில் தேடிப் பாா்த்தபோது உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனா்.