தொழுநோய் ஒழிப்பு உறுதி மொழி ஏற்ற ஆட்சியா் ம.ப.சிவன் அருள், மருத்துவ அலுவலா்கள். 
திருப்பத்தூர்

தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழா:ஆட்சியா் பங்கேற்பு

திருப்பத்தூா் பொதிகை பொறியியல் கல்லூரியில் மாவட்ட தொழுநோய் அலுவலகம் சாா்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழா, ஸ்பா்ஸ் தொழுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருப்பத்தூா் பொதிகை பொறியியல் கல்லூரியில் மாவட்ட தொழுநோய் அலுவலகம் சாா்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழா, ஸ்பா்ஸ் தொழுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சிா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். தொழுநோயால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு காலணிகள், ஊன்றுகோள், போா்வை ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா். தேசிய தொழுநோய் தினத்தையொட்டி, பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட தொழுநோய் ஒழிப்பு குறித்த சொற்றொடா் அமைக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, தொழு நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிறப்பாக சிகிச்சைகளை வழங்கிய மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ், நினைவு பரிசு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் வழங்கிப் பாராட்டினாா்.

தொடா்ந்து, தொழுநோய் குறித்த விழிப்புணா்வுக் கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கி வைத்தாா்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கே.எஸ்.டி.சுரேஷ், தொழுநோய் மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் ப.பிரீத்தா, குடும்பநல துணை இயக்குநா் கே.நெடுமாறன்,தொழுநோய் மருத்துவ அலுவலா் ஜெ.வெற்றிசெல்வி, வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அம்பிகா சண்முகம், கந்திலி வட்டார மருத்துவ அலுவலா் தீபா,பொதிகை பொறியியல் கல்லூரித் தலைவா் பி.கணேஷ்மல், பொருளாளா் கே.சி.எழிலரசன், தொழுநோய் அலுவலக நலக்கல்வியாளா் வீ.பிச்சாண்டி, முதல்வா் எம்.பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT