ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இரை தேடி வந்த மயில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது.
ஜோலாா்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள கிராமப் பகுதியில் இருந்து பெண் மயில் ஒன்று ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை உணவு தேடி வந்தது. அப்போது, 3-ஆம் நடைமேடையில் வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது.
இதையடுத்து ரயில்வே போலீஸாா் உயிரிழந்த மயிலை மீட்டு, திருப்பத்தூா் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத் துறையினா் மயிலை காட்டுப் பகுதியில் புதைத்தனா்.