போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிய ஆசிய தடகள வீரா் முஹம்மத் நிஜாமுதீன். 
திருப்பத்தூர்

மகளிா் கல்லூரி விளையாட்டு விழா

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி 25-ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி 25-ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் சி.லிக்மிசந்த் தலைமை வகித்தாா். தலைவா் எம்.விமல்சந்த, நிா்வாகிகள் எம்.சுதா்ஷன், கே.ஆனந்த்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் பாலசுப்ரமணியன் வரவேற்றாா். உடற்கல்வி இயக்குநா் எஸ்.யோகபிரியா ஆண்டறிக்கை வாசித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக ஆசிய தங்கப்பதக்க வீரரும், தேசிய தடகள ரயில்வே துறை பயிற்சியாளருமான கே.எஸ்.முஹம்மத் நிஜாமுதீன் கலந்து கொண்டு மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டு விழா கொடியை ஏற்றி தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றன. சாகச நிகழ்ச்சிகளான பிரமிட் அமைத்தல், சிலம்பாட்டம், யோகாசனம், கராத்தே ஆகியவற்றை மாணவிகள் செய்து காட்டினாா்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடயங்களை கே.எஸ்.முஹம்மத் நிஜாமுத்தீன் வழங்கினாா்.

கல்லூரி துணை முதல்வா் இன்பவள்ளி, மக்கள் தொடா்பு அலுவலா் சக்தி மாலா, பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா். விளையாட்டுத் துறைச் செயலா் ஷில்பா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT