திருப்பத்தூர்

ஆம்பூரில் ஆய்வு

DIN

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் 144 தடை உத்தரவு தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். திருப்பத்தூா் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு முழுவதுமாக மூடப்பட்டன. திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் ஆம்பூரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பாா்வையிட்டாா். இவற்றை வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் ஆய்வு செய்தாா்.

தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வாகனப் போக்குவரத்தைத் தடை செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட எஸ்.பி.யிடம் கேட்டறிந்தாா். தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய சாலைகள், முக்கிய தெருக்களையும் தடுப்புகள் ஏற்படுத்தி மூடப்பட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. பொ.விஜயகுமாா் அவரிடம் தெரிவித்தாா்.

தேசிய நெடுஞ்சாலைகளில் குறுகிய இடைவெளியில் தடுப்புகள் ஏற்படுத்தி மேலும் போக்குவரத்தைத் தடை செய்யுமாறு வடக்கு மண்டல ஐ.ஜி. உத்தரவிட்டாா்.

ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம், போலீஸாா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT