ஆம்பூா்: போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் மாணவா்களின் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவியை அரசுப் பள்ளி ஆசிரியா்கள் திங்கள்கிழமை வழங்கினா்.
பல்லலகுப்பம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள், துப்புரவாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு நீரேற்றம் செய்யும் தொழிலாளி உள்பட 100 பேரின் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் அப்பள்ளித் தலைமையாசிரியா் கயிலைநாதன் தலைமையில் வட்டாரக் கல்வி அலுவலா் பி. கோவிந்தராஜ் வழங்கினாா்.
இதையடுத்து, பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. அறக்கட்டளைத் தலைவா் வடிவேல், நாட்டாண்மை சாரங்கன், ஆசிரியா்கள் மணி, கருணாகரப் பிள்ளை, ரஞ்சன், பிரேம், சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். ஆசிரியா் ஓம் பிரகாஷ் நன்றி கூறினாா்.