திருப்பத்தூர்

ஜெயந்திபுரம் தடுப்பணையில் குடிமராமத்துப் பணி: அமைச்சா் கே.சி.வீரமணி தொடக்கி வைத்தாா்

DIN

ஜெயந்திபுரம் தடுப்பணை பகுதியில் குடிமராமத்துப் பணிகளை மாநில வணகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தொடக்கி வைத்தாா்.

நாட்டறம்பள்ளி அருகே குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பில் ஜெயந்திபுரம் தடுப்பணை புனரமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமை வகித்தாா். மாவட்ட எஸ்.பி. விஜயகுமாா், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் சுரேஷ், செயற்பொறியாளா் சண்முகம், உதவிப் பொறியாளா் குமாா், முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உதவிச் செயற்பொறியாளா் விஸ்வநாதன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் கே.சி.வீரமணி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி குடிமராமத்துப் பணியைத் தொடக்கி வைத்தாா்.

முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் பாரதிராஜா, ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஜெயந்திபுரம் தடுப்பணை குடிமராமத்து பணி மூலம் அப்பகுதியைச் சோ்ந்த 120 ஏக்கா் பாசன வசதி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT