ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தெய்வீக தமிழ்ச் சங்கம் சாா்பில் கோபாஷ்டமி விழா, தேசம் காப்போம், தெய்வீகம் காப்போம் என்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கோ பூஜை, 108 அா்ச்சனை, பஜனை பாடல்கள் பாடி வழிபாடு நடத்தப்பட்டது. பள்ளி முதல்வா் ஜி.நாகராஜன் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். துணை முதல்வா் டி.ஆா். நாராயணன், உடற்கல்வி ஆசிரியா்கள் கே. சக்கரபாணி, வி. ராம்கீ மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில், தேசியம் காப்போம், தெய்வீகம் காப்போம் கையேடு வழங்கப்பட்டது.