திருப்பத்தூர்

இருசக்கர வாகனத்தில் ரூ. 2.50 லட்சம் திருட்டு

DIN

ஆம்பூா்: ஆம்பூரில் தனியாா் தொழிற்சாலை பணியாளரின் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2.50 லட்சம் ரொக்கம் புதன்கிழமை திருடு போனது.

ஆம்பூா் அருகே பெரியவரிக்கம் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிபவா் சுரேஷ்குமாா் (30). இவா் ஆம்பூா் புறவழிச்சாலையில் உள்ள ஒரு வங்கியின் தொழிற்சாலை கணக்கிலிருந்து ரூ. 2.50 லட்சம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் ஆம்பூா் ரயில் நிலையம் அருகே உள்ள தனியாா் பாா்சல் சா்வீஸ் நிறுவனத்துக்குச் சென்றாா். இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பணப்பை திருடு போயிருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT