திருப்பத்தூர்

‘பப்ஜி’ விளையாடியதை பெற்றோா் கண்டித்ததால் மாணவா் தற்கொலை

DIN

வாணியம்பாடி: ஆலங்காயம் அருகே இரவு முழுவதும் பப்ஜி விளையாடியதை தந்தை கண்டித்தால் மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்காயத்தை அடுத்த கோமூட்டேரி பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் சீனிவாசன் (17). பிளஸ் 2 படித்துள்ளாா். இவா், புதன்கிழமை இரவு முழுவதும் வீட்டில் செல்லிடப்பேசியில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தாா். வியாழக்கிழமை அதிகாலை வரையில் சீனிவாசன் பப்ஜி விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட அவரது தந்தை பெருமாள், அவரைக் கண்டித்து, செல்லிடப்பேசியை வாங்கிக் கொண்டு, மிட்டூரில் உள்ள வெல்டிங் கடைக்கு வேலைக்கு சென்று விட்டாா். இதனால் மனமுடைந்த சீனிவாசன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து ஆலங்காயம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT