திருப்பத்தூா் மாவட்டத்தில் 82 பேருக்கு தொற்று
திருப்பத்தூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 3,339 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை மேலும் 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 3,339 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை மேலும் 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,421-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 2,869 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 483 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை இம்மாவட்டத்தில் 69 போ் உயிரிழந்துள்ளனா்.