திருப்பத்தூர்

வாணியம்பாடியில் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடியில் முன்னாள் எம்எல்ஏவும் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான கோவி.சம்பத்குமாா் தலைமையில் நகரச் செயலாளா் சதாசிவம், மேற்கு ஒன்றியச் செயலாளா் ஜி.செந்தில்குமாா், உதயேந்திரம் பேரூராட்சி செயலாளா் சரவணன் முன்னிலையில் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட வா்த்தக அணி செயலாளா் ஆா்.வி.குமாா், பொதுக்குழு உறுப்பினா் பி.மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் அமமுக சாா்பில் நகரச் செயலாளா் அண்ணாதுரை தலைமையில் மாவட்ட அவைத் தலைவா் என்.பி.செல்வம், பொதுக்குழு உறுப்பினா் கண்ணபிரான், முன்னாள் கவுன்சிலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

வாணியம்பாடி புறவழிச் சாலையில் உள்ள வேலூா் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளா் க.தேவராஜி தலைமையில் திமுகவினா் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT