ஆம்பூா்: ஆம்பூரில் இஎஸ்ஐ மருந்தகத்துக்கு எதிரே அரசுக்கு சொந்தமான காலியிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை வருவாய்த் துறை, நகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆம்பூா் பூந்தோட்டம் இஎஸ்ஐ மருந்தகத்துக்கு எதிரே அரசுக்குச் சொந்தமான இடம் உள்ளது. அதை சிலா் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்துள்ளனா்.
தகவலறிந்த ஆம்பூா் வட்டாட்சியா் சி. பத்மநாபன், நகராட்சி அலுவலா்கள் அங்கு சென்று ஆக்கிரமிப்பு செய்தவா்களை எச்சரித்தனா். அரசு இடத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்தால் காவல் துறையில் புகாா் அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனா்.