திருப்பத்தூர்

இருசக்கர வாகனத்தில் ரூ.99,000 பறிமுதல்

DIN


ஆம்பூா்: ஆம்பூா் தொகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.99,600 ரொக்கப் பணம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வெலதிகாமணிபெண்டா சோதனை சாவடியில் அலுவலா் சதாசிவம் தலைமையிலான நிலைகண்காணிப்புக் குழுவினா் அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனை நடத்தினா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சித்தூா் அடுத்த ராமகுப்பத்தை சோ்ந்த சுதாகா் என்பவரை சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரொக்கப் பணம் ரூ.99,600 கொண்டு வந்தது தெரியவந்தது. அதன்பேரில் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ஆம்பூா் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT