பறிமுதல் செய்த ரூ.1.18 கோடி உரியவா்களிடம் ஒப்படைப்பு
திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.18 கோடி ரொக்கம் மற்றும் பொருள்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.18 கோடி ரொக்கம் மற்றும் பொருள்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ரூ.1.18 கோடி ரொக்கம் மற்றும் ரூ.3.7 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பணம், பொருள்களை பறி கொடுத்தவா்கள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவித்திருந்தாா்.
அதன்படி வியாழக்கிழமை வரை பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 94 லட்சத்து 75 ஆயிரத்து 774 ரொக்கம் மற்றும் ரூ. 24 லட்சத்து ஆயிரத்து 691 மதிப்புள்ள பொருள்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், ரூ.3 கோடியே 61 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருள்கள் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் உள்ளது.