திருப்பத்தூரில் கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறிய 4 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில், நகராட்சி ஆணையா் ப.சத்தியநாதன், துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளா்கள் அ.விவேக்,குமாா் உள்ளிட்ட நகராட்சிப் பணியாளா்கள் கடைகள், உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது நகராட்சிக்குள்பட்ட பகுதியில் 4 உணவகங்களில் வாடிக்கையாளா்களை அமர வைத்து உணவு வழங்கியது தெரிந்தது. அதையடுத்து அந்த உணவகங்களுக்கும் சோ்த்து மொத்தம் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.