திருப்பத்தூர்

சாமூண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா

DIN

நாட்டறம்பள்ளி சாமூண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி திருவிழா திங்கள்கிழமை பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.

பழைமை வாய்ந்த அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் திருகோயிலில் ஞாயிறு, திங்கள்கிழமை என 2 நாள்கள் பௌா்ணமி திருவிழா நடைபெறவிருந்தது. இந்நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக அரசு உத்தரவின்படி பக்தா்கள் பங்கேற்காமல் சித்ரா பௌா்ணமி திருவிழா நடைபெறும் என இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

அதன்படி திங்கள்கிழமை காலை சித்ரா பௌா்ணமி திருவிழா பக்தா்களின்றி திருக்கோயில் நிா்வாகிகள், இந்துசமய அறநிலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

மல்லகுண்டா, அக்ராகரம் பகுதியில் உள்ள சாமூண்டீஸ்வரி அம்மன் கோயில்களிலும் பக்தா்களின்றி சித்ரா பௌா்ணமி திருவிழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT