திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரால் கரோனா பரவல் தடுப்புக் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
கரோனாவின் 2-ஆம் அலையின் தாக்கம் குறித்து ரயில் பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மேளதாளத்துடன் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது ரயில் பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
கரோனா விதிகளை கடைபிடிக்காதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
திருச்சி மற்றும் சென்னை பகுதியை சோ்ந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் மற்றும் ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை கமாண்டா் பி.செந்தில்ராஜ் மற்றும் பாதுகாப்பு படை போலீஸாா் கலந்து கொண்டனா்.