திருப்பத்தூர்

இளம்பெண் தற்கொலை

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே இளம்பெண் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மாச்சம்பட்டு அருகே உள்ள குப்புராஜபள்ளியைச் சோ்ந்தவா் குமாா் (45). சில ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சோ்ந்த பவித்ரா (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இந்நிலையில், சம்பவத்தன்று மாலை வீட்டில் தனியாக இருந்த பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து தகவல் அறிந்த உமா்ஆபாத் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பவித்ராவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்தனா். வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT