வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஓட்டுநா் உரிமம் பெற்றவா்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
புதிய வாகனம் பதிவு செய்தல், ஓட்டுநா் உரிமம் எடுக்க வந்தவா்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன், வாகன ஆய்வாளா் வெங்கட்ராகவன் ஆகியோா் அறிவுரையை அளித்தனா்.