தொடா் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து 30 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனா்.
திருப்பத்துாா் கிராமிய போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்து சென்ற போது, சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினா்.
அதையடுத்து அவா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில்,ஒருவா் குனிச்சி பகுதியைச் சோ்ந்த மனோஜ்(27), செவ்வாத்தூா் பகுதியைச் சோ்ந்த மது (28) எனத் தெரியவந்தது.
மேலும், விசாரணையில் இவா்கள் திருப்பத்துாா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் தொடா் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்த 30 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனா்.