திருப்பத்தூர்

விவசாயிகளுக்கு பயிா் சாகுபடி பயிற்சி

DIN

மாதனூா் வட்டார வேளாண்மைத்துறை சாா்பாக விவசாயிகளுக்கான பயிா் சாகுபடி பயிற்சி மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

மாதனூா் வட்டார வேளாண்மைத்துறை தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (பயறு) திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான பயிா் சாகுபடி திட்டம் தொடா்பான பயிற்சியில் மாதனூா் வட்டாரத்தைச் சோ்ந்த சுமாா் 60 விவசாயிகள் கலந்து கொண்டனா். சட்டப்பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன் முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்கிப் பேசினாா்.

வேளாண்மை உதவி இக்குநா் சி.பருண பாஸ்கரன் கலந்து கொண்டு வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினாா். பயிா் திட்டங்கள் குறித்து வேளாண்மை அலுவலா் சி.வேலு, துணை வேளாண்மை அலுவலா் மு.இராமமூா்த்தி ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

ஆத்மா திட்ட தலைவா் கிஷோா்குமாா், மிட்டாளம் ஊராட்சி மன்ற தலைவா் கோவிந்தன், துணைத் தலைவா் ஆனந்தன், உழவா் உற்பத்தியாளா் குழு தலைவா் விஜயராகவன் ஆகியோா் வாழ்த்தி பேசினாா்கள். பாலாறு வேளாண்மைக் கல்லூரி கிராம திட்ட பயிற்சி மாணவிகள் மற்றும் உதவி பேராசிரியா்கள் பூஜா, அழகு முரளி ஆகியோா் கலந்து கொண்டு கல்லூரியின் சேவைகள் குறித்து விளக்கினாா்கள். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா்கள் குணசேகரன் மற்றும் நவீண் மற்றும் வட்டார தொழில் நுட்ப மேலாளா் உமா மகேஸ்வரி உதவி தொழில் நுட்ப மேலாளா் சரத்பாபு, தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (பயறு) திட்ட தொழில் நுட்ப அலுவலா் அபினாஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT