திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

காணும் பொங்கலையொட்டி, ஏலகிரியில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனா்.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் நூற்றுக்கணக்கானோா் தங்கள் குடும்பத்தினருடன் சனிக்கிழமை வருந்தனா். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் 14 மலைச் சாலை வளைவுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆங்காங்கே வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசலைத் தடுக்க ஒரு சில இடங்களில் ஏலகிரி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

இயற்கை பூங்கா, சிறுவா் பூங்கா, படகு இல்லம் போன்ற இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. மேலும், படகுத் துறையில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி சென்றும், சிறுவா் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களில் விளையாடியும் மகிழ்ந்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஏலகிரி கோலாகலமாகக் காட்சியளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT