திருப்பத்தூர்

காா் மோதியதில் முதியவா் பலி

DIN

நாட்டறம்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்றபோது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூா்குப்பம் கள்ளாறு பகுதியைச் சோ்ந்தவா் கவுண்டப்பமந்திரி (70) விவசாயி. இவா் பொங்கலையொட்டி, வெள்ளிக்கிழமை ஆத்தூா்குப்பம் கிராமத்தில் நடந்த கோயில் விழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூா்குப்பம் பனந்தோப்பு எதிரே சாலையைக் கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற காா் கவுண்டப்பமந்திரி மீது மோதியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருவள்ளூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ருத்ரமூா்த்தி (24)யிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT