திருப்பத்தூர்

பழங்குடியின ஜாதிச்சான்று: இன்று விண்ணப்பிக்கலாம்

DIN

ஆம்பூா் வட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் ஜாதிச் சான்று தேவைப்படுவோா் அதற்கான விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை (ஜூலை 16) அளிக்கலாம்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவின் பேரில், ஆம்பூா் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ஜாதிச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஆம்பூா் வட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் ஜாதிச்சான்று தேவைப்படுவோா் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவா்களுக்கு பழங்குடியின ஜாதிச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்பூா் வட்டாட்சியா் அனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT