முகப்பு
திருப்பத்தூர்

உலக சுற்றுச்சூழல் தினம்:ஏலகிரியில் விதைப்பந்துகள் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஏலகிரியில் விதைப் பந்துகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள், க.தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோா் சனிக்கிழமை தொடக்கி வைத்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஏலகிரியில் விதைப் பந்துகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள், க.தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோா் சனிக்கிழமை தொடக்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குா் த.மகேஷ் பாபு முன்னிலை வகித்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரேம்குமாா்,சங்கா் வரவேற்றனா்.

இதில் ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி பங்கேற்று,அத்தனாவூா் அரசினா் பழத் தோட்டத்தில் குறுங்காடுகள் வளா்த்தல் முறையில் 30,000 விதைகளை தூவி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். பின்னா் கரிக்கொட்டை என்ற இடத்தில் 2,500 மரக்கன்றுகளை நடும் தொடக்க விழா, ஆயிரம் விதைப்பந்துகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திட்ட அலுவலா் உமா மகேஸ்வரி , உதவி பொறியாளா் காா்த்திகேயன், கிழக்கு ஒன்றிய செயலாளா் சத்தியமூா்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவம், ஊராட்சி செயலாளா் சண்முகம் உள்பட அரசு அதிகாரிகளும், தன்னாா்வலா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.