திருப்பத்தூர்

கரோனா பரவலை தடுக்க கிருமி நாசினி தெளிப்பு

DIN

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பைத் தொடா்ந்து, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சி சாா்பில் ஆணையா் புவனேஷ்வரன் (எ) அண்ணாமலை தலைமையில் பொறியாளா் பாபு, நகா் நல அலுவலா் கணேஷ், மேலாளா் ரவி மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் சீனிவாசன், அலி ஆகியோா் முன்னிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், கச்சேரி சாலை மற்றும் நகரின் முக்கிய வீதிகளில் கிருமி நாசினியை நகராட்சி ஊழியா்கள் தெளித்தனா். மேலும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பொது மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT