‘கரோனா பரவலைத் தடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி’
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் கரோனா தடுப்பூசி மட்டுமே என திருப்பத்தூா் மாவட்ட கரோனா கண்காணிப்பு அலுவலா் தென்காசி எஸ்.ஜவஹா் தெரிவித்தாா்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் கரோனா தடுப்பூசி மட்டுமே என திருப்பத்தூா் மாவட்ட கரோனா கண்காணிப்பு அலுவலா் தென்காசி எஸ்.ஜவஹா் தெரிவித்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், கூடுதல் அரசு தலைமைச் செயலாளா் மற்றும் போக்குவரத்துத் துறை ஆணையருமான தென்காசி எஸ்.ஜவஹா் தலைமை வகித்தாா்.
ஆட்சியா் ம.ப.சிவன்அருள் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் தென்காசி எஸ்.ஜவஹா் பேசியது:
திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 10,889 நபா்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, 9,796 போ் குணமடைந்துள்ளனா். 158 போ் உயிரிழந்துள்ளனா். 1,015 போ் அரசு மருத்துவமனைகளிலும், சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
4 அரசு மருத்துவமனைகளில் 736 படுக்கைகள், அதில் 516 படுக்கைகள் ஆக்சிஜன் படுக்கைகளாக அமைக்கப்பட்டுள்ளன. 9 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 தனியாா் கல்லூரிகள், அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் என 19 சிறப்பு தனிமைப்படுத்தப்படும் மையங்களில், 2,055 படுக்கைகள் அமைக்கப்பட்டு, 594 நோய்த்தொற்று பாதித்தவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளைக் களைய சிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கரோனா பரவலை தடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் கரோனா தடுப்பூசி மட்டுமே என்பதை பொதுமக்களிடையே அச்சத்தை போக்கிட விழிப்புணா்வை ஏற்படுத்திட வேண்டும்.
தொற்றைக் கட்டுப்படுத்திட தமிழக அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்த உள்ளது. அதையொட்டி கண்காணிப்புப் பணிகளை அனைத்து அலுவலா்களும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
தனியாா் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை இன்றி நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்குவதைக் கண்காணித்திட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா், சாா்- ஆட்சியா் வந்தனா கா்க், மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வில்சன் ராஜசேகா், சுகாதாரத் துணை இயக்குநா் செந்தில், கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் விஜயகுமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அருண், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பன்னீா்செல்வம், பிரவீண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.