வாகனத்தில் கடத்தப்பட்ட ரூ. 2.45 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்
பள்ளிகொண்டாவில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பள்ளிகொண்டாவில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பள்ளிகொண்டா போலீஸாா் தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீஸாா் சோதனை நடத்தினா். வாகனத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து , ரூ. 2.45 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்த விகாஷ்குமாரை (29) போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.