கானாற்றின் குறுக்கே பாலம் கோரி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
ஆம்பூா் அருகே கானாற்றின் குறுக்கே பாலம் அமைக்கக் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:01 AM
ஆம்பூா் அருகே கானாற்றின் குறுக்கே பாலம் அமைக்கக் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
ஆம்பூா் அருகே நாச்சா்குப்பம் ஊராட்சி கம்மியம்பட்டு கிராமத்தில் உள்ள கானாற்றில் கடந்த சில மாதங்களாக மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் கம்மியம்பட்டு கிராமத்திலிருந்து வருவதற்கு மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். கானாற்றின் குறுக்கே பாலம் அமைத்துத் தருமாறு அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
தற்போது கானாற்றின் மீது பாலம் அமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Advertisement