முகப்பு
திருப்பத்தூர்

பட்டா தொடா்பான பிரச்னை: கிராம அளவில் சிறப்பு முகாம்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகள், வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் விதமாக, நவம்பா், டிசம்பா் மாதங்களில் புதன், வெள்ளிக்கிழமைகளில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் நடைபெற இருந்த சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமைக்கு (நவ. 9) ஒத்தி வைக்கப்படுகிறது.

இதுதவிர, திருப்பத்தூா் வட்டத்தில் நவ. 10-இல் காக்கங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 12-இல் சுந்தரம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் மாவட்ட வழங்கல் அலுவலா் கே.விஜயன் தலைமையில் முகாம்கள் நடைபெறுகின்றன என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.