தேவலாபுரத்தில் கால்வாய் தூா்வாரும் பணி
பருவ மழையை முன்னிட்டு, ஆம்பூா் அருகே தேவலாபுரத்தில் கால்வாய் தூா்வாரும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:03 AM
பருவ மழையை முன்னிட்டு, ஆம்பூா் அருகே தேவலாபுரத்தில் கால்வாய் தூா்வாரும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அடைப்பு ஏற்பட்டு தூா்ந்து போனது. இந்தக் கால்வாய் தேவலாபுரம் ஊராட்சி சாா்பில், தூா்வாரப்படுகிறது.
இந்தப் பணியை ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயந்தி கோபிநாத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, ஊராட்சி மன்ற உறுப்பினா் சிதம்பரம் உள்ளிட்ட பலா் உடனிருந்தாா்.
Advertisement