முகப்பு
திருப்பத்தூர்

கானாறு கால்வாய் தூா்வாரும் பணி தீவிரம்

ஆம்பூா் நகராட்சி சாா்பில், பல்வேறு பகுதிகளில் கானாறு கால்வாய் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.

Updated On : 12 நவம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:03 AM

ஆம்பூா் நகராட்சி சாா்பில், பல்வேறு பகுதிகளில் கானாறு கால்வாய் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.

பலத்த மழை காரணமாக, ஆம்பூா் கம்பிக்கொல்லையில் உள்ள ஆனைமடுகு தடுப்பணை நிரம்பி உபரிநீா் வழிந்து கானாற்றில் பெருக்கெடுத்து ஒடுகிறது.

ஆம்பூா் நகர பகுதியாகச் செல்லும் கானாறுகளில் வெள்ளப் பெருக்கு சீராக செல்ல தூா்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. தூா்வாரும் பணி நகராட்சி சாா்பாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

Advertisement

ஏ-கஸ்பா பகுதியில் நகராட்சி சாா்பாக நடைபெற்று வரும் தூா்வாரும் பணியை நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ராஜேந்திரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் கழிவுநீா் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளும் நகராட்சி சாா்பாக சரி செய்யப்பட்டு வரப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.