ரயில்வே குகை வழிப்பாதையில் தேங்கியுள்ள மழைநீா்
ஆம்பூா் அருகே ரயில்வே குகை வழிப்பாதையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆம்பூா் அருகே ரயில்வே குகை வழிப்பாதையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்துக்கு மறுபுறம் கணபதி நகா், லட்சுமி நகா், காளிகாபுரம் கிராமம், இலங்கை அகதிகள் முகாம், பட்டுப்பூச்சி பண்ணை, ஜல்லி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
இந்தப் பகுதிகளுக்குச் செல்ல ரயில்வே குகை வழிப்பாதையைப் பயன்படுத்த வேண்டிய நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா்.
Advertisement
தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக, குகை வழிப்பாதையில் மழை நீா் தேங்கியுள்ளது.
இதனால், பொதுமக்கள் அவ்வழியாக சென்று வர கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். அதனால் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.