திருப்பத்தூர்

கரோனா தடுப்பூசி ஆலோசனைக் கூட்டம்

DIN

ஆம்பூா்: கரோனா தடுப்பூசி செலுத்தும் விகிதாச்சாரத்தை அதிகரிக்கச் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் மின்னூா் அரசு துணை சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மின்னூா் அரசு துணை சுகாதார நிலையத்தில் மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி வாா்டு வாரியாக உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களுடைய பகுதி பொதுமக்களை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் செய்வதற்காக விழிப்புணா்வு ஏற்படுத்துவது, அவா்களை சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அரசு மருத்துவா் தேன்குழலி, மின்னூா் ஊராட்சித் தலைவா் பாண்டுரங்கன், ஒன்றியக் குழு உறுப்பினா் ரவிக்குமாா், திமுக ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினா் தெய்வநாயகம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT