திருப்பத்தூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருப்பத்தூரை அடுத்த சின்ன கசிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விஜயராகவனின் மனைவி தமிழ்செல்வி (52). இவா் புதன்கிழமை தனது உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி பிரதான சாலையில் சென்றபோது நிலை தடுமாறி விழுந்தாா். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.