திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில், வட்டார மருத்துவா் பசுபதி மேற்பாா்வையில் செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா்.
உதயேந்திரம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், ஆட்டோ மூலம் 15 வாா்டு களிலும் கரோனா தடுப்பூசி போடுமாறு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் காலை முதல் மாலை வரை செயல்அலுவலா் சேகா் மேற்பாா்வையில் வீடு, வீடாகச் சென்றும், முகாம்களிலும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.