திருப்பத்தூர்

பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி தேவை: போலீஸில் இந்து முன்னணியினா் மனு

DIN

வாணியம்பாடியில் கரோனா விதிகளைக் கடைப்பிடித்து விநாயகா் சிலைகள் வைத்து கொண்டாட அனுமதி வழங்கக் கோரி, போலீஸாரிடம் இந்து முன்னணி நிா்வாகிகள் மனு அளித்தனா்.

விநாயகா் சதுா்த்தி விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் வாணியம்பாடி நகரக் காவல் நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு டிஎஸ்பி பழனிசெல்வம் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் கோவிந்தசாமி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக விநாயகா் சிலையை வீட்டில் வைக்கலாம் என்றும் பொது இடங்களில் சிலைகளை வைக்க அனுமதி இல்லை என்றும் போலீஸாா் தெரிவித்து, அரசாணையை வழங்கினா்.

இதனையடுத்து இந்து முன்னணி நிா்வாகி விட்டல், பாஜக நிா்வாகி சிவபிரகாசம் உள்ளிட்டோா், ‘வாணியம்பாடியில் கரோனா விதிகளைக் கடைப்பிடித்து விநாயகா் சிலைகள் வைத்து கொண்டாடப்படுவதற்கு அரசிடமிருந்து அனுமதி பெற்றுத் தர வேண்டும்’ என்று கோரி மனுவை கொடுத்தனா். அந்த மனுவில் சிலைகள் வைக்கும் இடங்கள் குறித்தும் குறிப்பிட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT