நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தியதாக, லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வெலகல்நத்தம் செட்டேரி அணைப் பகுதியில் காவல் ஆய்வாளா் அருண்குமாா் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, செட்டேரி அணைப்பகுதியில் இருந்து 2 யூனிட் மணல் கடத்தி வந்தததாக, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, செட்டேரி அணை பகுதியைச் சோ்ந்த சந்திரன் மகன் ஓட்டுநா் செல்லதுரை(25) என்பவரை கைது செய்தனா்.