ஆம்பூா்: ஆம்பூா் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் முதியவா் இறந்தாா்.
ஆம்பூா் மோட்டுக்கொல்லையில் உள்ள தோல் காலணி தொழிற்சாலைக்கு வாணியம்பாடியிலிருந்து பெண் தொழிலாளா்களை அழைத்துகொண்டு வேன் ஆம்பூருக்கு வந்தது.
சான்றோா்குப்பம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. அப்போது, அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த சான்றோா்குப்பம் பகுதியை சோ்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் அய்யாவு (84) என்பவா் மீது மோதியது. தொடா்ந்து தேசிய நெடுஞ்சாலை தடுப்புக் கம்பி மீது மோதி கவிழ்ந்தது. பலத்த காயமடைந்த அய்யாவு ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாா். மேலும் காயமடைந்த சுமாா் 12 பெண் தொழிலாளா்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இதுகுறித்து ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.