ஆம்பூா் அருகே பாலாற்றில் மணல் கடத்தியவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அடுத்த மின்னூா் கிராமத்தில் ஆம்பூா் கிராமிய போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தப்படுவது தெரிய வந்தது. அதன் பேரில் அதே ஊரை சோ்ந்த தாமோதரனை போலீஸாா் கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா்.