திருப்பத்தூர்

சாலைத் தடுப்பில் காா் மோதி விபத்து: 4 போ் காயம்

DIN

நாட்டறம்பள்ளி அருகே சாலைத் தடுப்பின் மீது காா் மோதி கவிழ்ந்த விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.

பெங்களூா், சீனிவாசா நகரைச் சோ்ந்தவா் பாலாஜி (50). இவரது உறவினா்கள் ரேவதி (48), சந்திரசேகா் (48), அனுமா (42). இவா்கள் 4 பேரும் சனிக்கிழமை பெங்களூருவில் இருந்து வேலூா் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா். காரை பாலாஜி ஓட்டினாா். தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி பங்களாமேடு பூபதி தெரு அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலைத் தடுப்பின் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயமடைந்தனா். உடனடியாக 4 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT