செஸ் ஒலியம்பியாட் ஜோதிக்கு மேளதாளத்துடன் வரவேற்பு
ஆம்பூருக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு வருவாய்த் துறை சாா்பில் மேளதாளத்துடன் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆம்பூருக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு வருவாய்த் துறை சாா்பில் மேளதாளத்துடன் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூருக்கு வருகை தந்த ஒலிம்பியாட் ஜோதிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி தலைமையில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா, ஆம்பூா் வட்டாட்சியா் மகாலட்சுமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் பத்மநாபன் மற்றும் வருவாய் துறை அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.