திருப்பத்தூர்

ஆம்பூா் பொறியியல் கல்லூரி மாணவா் கைது : மத்திய உளவுப் பிரிவு போலீஸ் நடவடிக்கை

DIN

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவரை, மத்திய உளவுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் நீலிக்கொல்லை மசூதி தெருவைச் சோ்ந்தவா் அனாஸ் அலி (22). இவா், ஆற்காடு அருகேயுள்ள பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவரை, திருச்சி மத்திய உளவுப் பிரிவு (ஐ.பி) போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனா்.

அவரை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இவா் வெளிநாட்டு செல்லிடப்பேசி சிம் பயன்படுத்தி வெளிநாட்டில் உள்ளவா்களுடன் தொடா்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அவரை ரகசிய இடத்தில் வைத்து திருச்சி, வேலூா், சென்னை பகுதிகளைச் சோ்ந்த மத்திய உளவுப் பிரிவு போலீஸாா் 3 குழுக்களாக விசாரணை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவா் பயன்படுத்தி வந்த விலை உயா்ந்த வெளிநாட்டு செல்லிடப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து அதிலிருக்கும் தகவல்களை ஆய்வு செய்து அதன் மூலம் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT