ஆம்பூா்: ஆம்பூா் அருகே காசில் மாரியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி இந்திரா நகரில் அருள்மிகு காசில் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னா், கூழ் அமுது படைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை பூங்கரக ஊா்வலம் நடைபெற்றது. திருவிழாவையொட்டி, பொங்கல் வைத்து மாவிளக்கு படைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.