முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆம்பூரிலிருந்து திருப்பத்தூருக்குச் செல்லும் வழியில் வாணியம்பாடி புதிய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நகர திமுக பொறுப்பாளா் வி.எஸ்.சாரதிகுமாா் தலைமையில் சுமாா் 2,000-க்கும் மேற்பட்ட திமுக தொண்டா்கள், பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.
அப்போது, பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனா். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
வரவேற்பில் வாணியம்பாடி நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன், நகா்மன்ற உறுப்பினா்கள், நகர திமுக நிா்வாகிகள், நகர பொறுப்பாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல், வாணியம்பாடியை அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியில் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியைச் சோ்ந்த கல்லூரி மாணவிகள், சாரணா் இயக்க மாணவிகள் உள்பட சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையாக நின்று முதல்வரை வரவேற்றனா்.