திருப்பத்தூர்

மனநலம் குணமான பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

DIN

திருப்பத்தூா் பெண்கள் மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் குணமடைந்ததையடுத்து, அவரின் குடும்பத்தினரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.

திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மன நலம் பாதிக்கப்பட்டு, சுற்றித் திரிந்து கொண்டிருந்த பெண்ணை, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் மீட்டு, ரயில் நிலைய சாலையில் இயங்கி வரும் அரசின் பெண்கள் மனநலக் காப்பகத்தில் சோ்த்தனா்.

காப்பகத்தில் தொடா்ந்து அளிக்கப்பட்ட மருந்து, மாத்திரைகள் மற்றும் மன நல ஆலோசனைகளால் அந்தப் பெண் குணமடைந்தாா்.

மனநலம் குணமடைந்தவா் உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவை சோ்ந்த முபினா (55) என்பதும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு காணாமல் போய்விட்டாா் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, ஆக்ராவில் உள்ள முபினா குடும்பத்தாா் வரவழைக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா முன்னிலையில் அவா் ஒப்படைக்கப்பட்டாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி, மனநலக் காப்பகத்தின் துணைச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT